சட்டவிரோத மது விற்பனை... குளித்தலையில் 15 பேர் கைது!
குளித்தலை அருகே கணேசபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோத மது விற்பனை தொடர்பாக 15 பேரை கைது செய்துள்ளது காவல்துறை. மேலும் பலரைத் தேடி வருவதாகவும் தகவல்.
HIGHLIGHTS
குளித்தலை அருகே கணேசபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோத மது விற்பனை தொடர்பாக 15 பேரை கைது செய்துள்ளது காவல்துறை. மேலும் பலரைத் தேடி வருவதாகவும் தகவல்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ளது கணேசபுரம். இங்கு கடந்த சில நாட்களாக சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல்கள் வந்தவண்ணம் இருந்தன. இதனால் காவல்துறை தங்களது ஆட்கள் மூலம் இதுகுறித்து விசாரணையை மறைமுகமாகத் துவங்கினர். இதனையடுத்து கணேசபுரம் மட்டுமின்றி, ஈச்சம்பட்டி, கிளாரிபட்டி, நடுப்பட்டி, சீகம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்கப்பட்டு வருவதை அறிந்த காவல்துறையினர், அங்கு தேடுதல் வேட்டையைத் தொடர்ந்தனர்.
ஒரே நேரத்தில் அந்தந்த பகுதிகளுக்கு சென்ற காவல்துறையினர் பலரையும் கைது செய்தனர். சுப்பிரமணி, செல்வராஜ், சிவலிங்கம், கண்ணன், ஆறுமுகம் என மொத்தம் 5 பேரை கைது செய்த காவல்துறையினர் அவர்கள் மூலம் மேலும் விசாரணையைத் துரிதப்படுத்தினர்.
மேலும் கிடைத்த தகவலின் அடிப்படையில், தோகைமலை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் 5 பேரையும், நொய்யல் பகுதியில் 5 பேரையும் கைது செய்தனர். மொத்தம் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து பல மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.