Begin typing your search above and press return to search.
ரயில்வே ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி
கரூர் ரயில் நிலையத்தில் பணியாற்றும் நூற்றுக்கும் அதிகமான தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கொரோனா வைரஸ் இரண்டாவது அலையில் வைரஸ் தொற்று பரவல் அதிகமாக உள்ளதால் அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் தொழிற்சாலை உள்ளிட்டவைகளில் பணியாற்றுபவர்களுக்கு பணிபுரியும் இடத்திலேயே தடுப்பூசி அளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கரூர் ரயில் நிலையத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் கரூர் ரயில் நிலையம் மற்றும் அருகாமையில் உள்ள ரயில் நிலையங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள், பணியாளர்கள் 160 க்கும் மேற்பட்டோர் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர். தடுப்பூசி செலுத்துவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சுகாதாரத்துறை செய்திருந்தது.