/* */

நெருங்கும் மழை காலம்: வாய்க்கால்கள் தூர் வாரும் பணி தீவிரம்

கரூர் நகராட்சியில் மழை காலத்தையொட்டி இரட்டை வாய்க்கால் உள்ளிட்ட வடிகால்களை தூர்வாரும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் மழைக் காலத்தை ஒட்டி தமிழகம் முழுவதும் மாபெரும் வடிகால் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கரூர் நகராட்சிக்குட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் வடிகால்கள் மற்றும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள அமராவதி ராஜவாய்க்கால், இரட்டை வாய்க்கால், கிளை வாய்க்கால்கள் உள்ளிட்டவை 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஹிட்டாச்சி, ஜேசிபி உள்ளிட்ட ராட்சத இயந்திரங்களைக் கொண்டு தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. வடிகால் தூர்வாரும் பணிகளை நகராட்சி அதிகாரிகள் பார்வையிட்டனர். 8 வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் தூர்வாரும் பணிகள் கணக்கிடப்பட்டு 6 நாட்களில் 48 வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் தூர்வாரும் பணி முடிவடைய உள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 22 Sep 2021 6:48 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  4. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆணவம்: வாழ்வை சிதைக்கும் நஞ்சு
  6. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  7. வீடியோ
    🔴LIVE: கர்நாடகாவில் அண்ணாமலை அனல் பறக்கும் பேச்சு! | தொண்டர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  9. வீடியோ
    ஆன்மிகம் கை கொடுக்கும்!படத்தை பார்த்தா என்ன கிடைக்கும்?...
  10. ஈரோடு
    ஈரோட்டில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை, பிரார்த்தனை