/* */

ரவுடிகள் குறித்த முதல்வரின் அறிவிப்பு வரவேற்க்கதக்கது - சரத்குமார்

ரவுடிகள் ஒடுக்கப்படுவது குறித்த முதல்வரின் அறிவிப்பு வரவேற்க்கதக்கது என ச.ம.க. தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

ரவுடிகள் குறித்த முதல்வரின் அறிவிப்பு வரவேற்க்கதக்கது -  சரத்குமார்
X

நாகர்கோவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சரத்குமார். 

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகியின் இல்ல விழா உட்பட பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த, அக்கட்சியின் தலைவர் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது உக்ரைன் நாட்டில் மருத்துவம் படித்து அங்கு போர் காரணமாக தமிழகம் திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு, தமிழகத்தில் இட ஒதிக்கீடு வழங்க முடியுமா என்பது கேள்விக்குறிதான் என்றார்.

காரணம் ஏற்கனவே தமிழகத்தில் மருத்துவ மாணவர்கள் தேர்வுகள் எழுதி பல்வேறு கட்டங்களை கடந்து மருத்துவப் படிப்பு படித்து வருகின்றனர், எனவே உக்ரைனில் இருந்து வந்த மாணவர்களுக்கு, மருத்துவ கல்லூரிகளில் இட ஒதுக்கீடு வழங்குவது இயலாத காரியம் என்றார்.

மேலும் மனிதாபிமான அடிப்படையில் அவர்களது கல்வி தொடர அரசு வழிவகை செய்ய வேண்டும் எனவும், அரசியல் நோக்கத்தோடு இடம் தருவேன் என்று கூறிவிட்டு செய்ய முடியாமல் போனால் அது பயனற்றது எனவும் தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குறிப்பாக திமுக இயக்கத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் சட்டத்தை மீறி நடந்து கொண்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்து இருப்பது வரவேற்கத்தக்கது, இதுதான் உண்மையான ஜனநாயகம் என கூறினார்.

இதே போன்று தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் தற்கொலை என்பது தொடர்கதையாகி வருகிறது, இதனை தடுக்க அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க முதல்வரும், கல்வி அமைச்சரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறினார்.

Updated On: 14 March 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!