/* */

நாகர்கோவிலில் சிலம்பம் ஆடி மாநில போட்டியை தொடங்கி வைத்தார் அமைச்சர்

நாகர்கோவிலில் சிலம்பம் ஆடி மாநில அளவிலான அடி முறை போட்டியை தொடங்கி வைத்தார் அமைச்சர் மனோ தங்கராஜ்.

HIGHLIGHTS

நாகர்கோவிலில் சிலம்பம் ஆடி மாநில போட்டியை தொடங்கி வைத்தார் அமைச்சர்
X

சிலம்பம் அடிமுறை போட்டியை தொடங்கி வைத்தார் அமைச்சர் மனோ தங்கராஜ்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள அறிஞர் அண்ணா விளையாட்டரங்கில் லெமோரியா தற்காப்பு கலை என்ற அமைப்பின் மூலம் தமிழக அளவிலான இரண்டு நாள் அடிமுறை சிலம்பம் போட்டி இன்று தொடங்கியது.

இதனை தமிழக தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.முன்னதாக போட்டியினை தொடங்கி வைத்த அவர் சிலம்பம் ஆடி அங்கு உள்ள அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் இருந்து 600 க்கும் மேற்பட்ட தற்காப்புக்கலை பயின்ற சின்னஞ்சிறு சிறுமிகள் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

இதனிடையே காலத்தால் அழிந்து போன அடிமுறை, தற்காப்பு கலையை சிறுவர் சிறுமிகளும், இளைய தலைமுறையினரும் செய்து காட்டியது அங்குள்ள பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

இது போன்ற விளையாட்டு மற்றும் பயிற்சி அடுத்த தலைமுறைக்கு நம்பிக்கையூட்டும் விதமாக அமைந்ததாக அங்குள்ள பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

Updated On: 27 Feb 2022 2:45 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!