/* */

தொடர் குற்ற செயல் - 3 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் குற்ற செயலில் ஈடுபட்ட 3 வாலிபர்களை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

தொடர் குற்ற செயல் - 3 வாலிபர்கள்  குண்டர் சட்டத்தில் கைது
X

பைல் படம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாஞ்சான்குடியிருப்பு பகுதியை சேர்ந்த சூரியா என்ற தளபதி சூரியா, கோட்டார் ராமசாமி கோவில் தெருவை சேர்ந்த கிஷோர் குமார், ஆசாரிபள்ளம் குருகுலம் சாலையை சேர்ந்த ஆல்டோ மைகேல் டோனிக் ஆகிய 3 பேர் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

ஏற்கனவே இவர்கள் மீது நாகர்கோவில், சுசீந்திரம் உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் போக்ஸோ உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடும்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

இதனிடையே மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவுப்படி 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர். குமரி மாவட்டத்தில் கடந்த 7 மாதத்தில் 22 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 31 July 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!