/* */

தனியார் முயற்சியால் பயன்பாட்டிற்கு வந்த குளம்

தனியார் முயற்சியால் பயன்பாட்டிற்கு வந்த குளம்
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்த குளம் தனியார் அமைப்பின் முயற்சியால் பயன்பாட்டிற்கு வந்தது.

கன்னியாகுமரி மாவட்டம் தேரூர் பகுதியில் உள்ள பெரிய குளம் ஒன்று செடிகள் மற்றும் குப்பைகளால் நிரம்பி பயன்படுத்த முடியாத அளவில் காணப்பட்டது. இந்த குளத்தை சீர் செய்தால் நீர் ஆதாரம் பெருகும் என்பதோடு விவசாய தேவைகளுக்கும் பயன்படும் என ஊர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தார்கள்,இந்நிலையில் குளத்தை சீர் செய்ய முன் வந்த வெல்பர் அசோசியேசன் ரோட்டரி கிளப் ஆப் நாகர்கோவில் அமைப்பினர் அரசின் அனுமதி பெற்று ஆகாய தாமரை இலைகளை தூவி ஜேசிபி இயந்திரம் மூலம் குளத்தை தூர்வாரி சீர் செய்தனர்.

3 லட்ச ரூபாய் செலவில் ஊர் பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் கடந்த 15 நாட்களாக நடைபெற்ற பணி முடிவு பெற்று உலக நீர் தினத்தை முன்னிட்டு பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த பணியை மேற்கொண்ட தனியார் அமைப்பிற்கும் உதவியாக இருந்த தன்னார்வலர்கள் மற்றும் ஊர் பொதுமக்களுக்கு இயற்கை ஆர்வலர்கள், நீர் அமைப்பினர் விவசாய அமைப்பினர் உட்பட பல்வேறு தரப்பினர் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்து உள்ளனர்.

Updated On: 17 April 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்
  2. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  3. வணிகம்
    கடன் தொல்லையில்லாமல் வாழ இப்படி ஒரு வழி இருக்கா?
  4. வணிகம்
    பணத்தை இப்படி சேமித்தால்.... ஓஹோன்னு வாழலாம்...! எப்படி?
  5. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  6. வணிகம்
    கடனில் மூழ்கி வாழ்க்கை போச்சா? மீள ஒரு வழி இருக்கு!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. வணிகம்
    சில ஆயிரங்கள பல லட்சம் கோடிகளா மாத்தணுமா? கூட்டு வட்டி பத்தி...
  9. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேர் கைது..!
  10. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’...