/* */

குமரியில் வன அதிகாரி உட்பட 9 வனத்துறை ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு

குமரியில் வன அதிகாரி உட்பட 9 வனத்துறை ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

குமரியில் வன அதிகாரி உட்பட 9 வனத்துறை ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று குறைந்து இருந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக குமரியில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து தற்போது உள்ள நிலையில் 5803 நபர்கள் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே குமரியில் நாள்தோறும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மேலும் போலீசார், தீயணைப்புத் துறையினர், சுகாதாரத்துறை ஊழியர்கள், மருத்துவர்கள் என பல்வேறு தரப்பு அரசு ஊழியர்களும் நோய் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், மாவட்ட வன அலுவலர் இளையராஜா உட்பட நாகர்கோவிலில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் பணிபுரியும் 9 வன ஊழியர்களுக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நாகர்கோவில் மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் வனத்துறை அலுவலகம் முழுவதையும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தனர்.

மேலும் வனத்துறை அலுவலகத்தில் பணியாற்றும் சக ஊழியர்கள் மற்றும் வனத்துறை அலுவலகத்தில் தொடர்பில் இருந்த அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Updated On: 27 Jan 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  2. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  3. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  4. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  5. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  6. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  7. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  8. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  9. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  10. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!