Begin typing your search above and press return to search.
குடிபோதையில் கார் விபத்து: தாய், மகள் உட்பட 4 பேர் படுகாயம்
குமரியில் குடிபோதையில் நடந்த கார் விபத்தில் தாய், மகள் உட்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
HIGHLIGHTS
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் டெரிக் சந்திப்பு பகுதியில், நேற்று மாலை குடிபோதையில் காரில் வந்த நபர்கள் அதிவேகமாக கார் ஒட்டியதில் இரண்டு கார்களும் அடுத்தடுத்து வந்த மூன்று இருசக்கர வாகனங்களும் சேதம் அடைந்தன.
தொடர்ந்து, அதிவேகமாக சென்ற கார் சாலை ஒரே தடுப்பு கம்பியில் மோதி நின்றது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த தாயும் மகளும் படுகாயமடைந்தனர். இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்களும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதனையடுத்து போலீசார் சம்பவ இடம் வந்து கார்களை கிரேன்கள் மூலமாக அப்புறப்படுத்தினர். இதனிடையே விபத்து நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.