/* */

"சிறை சென்று திரும்பிய முன்னாள் எம்.எல்.ஏ" அதிமுக கொடியை பயன்படுத்த எதிர்ப்பு

போக்ஸோ சட்டத்தில் கைதாகி சிறை சென்று திரும்பிய முன்னாள் எம்.எல்.ஏ அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது - மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் குமரிமாவட்ட அதிமுகவினர் கோரிக்கை மனு அளித்தனர்.

HIGHLIGHTS

சிறை சென்று திரும்பிய முன்னாள் எம்.எல்.ஏ  அதிமுக கொடியை பயன்படுத்த எதிர்ப்பு
X

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் பகுதியை சேர்ந்தவர் நாஞ்சில் முருகேசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான இவர் மாற்று கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்து ஆளும்கட்சி என்ற பெயரில் அராஜக செயல்களில் ஈடுபட்டு கழகத்திற்கும் கழக நற்பெயருக்கும் தொடர்ந்து களங்கம் ஏற்படுத்தியதால் கழக ஒருங்கிணைப்பாளர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் உத்தரவுப்படி அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.

இதனிடையே தனது 56 வயதில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் போக்ஸோ சட்டத்தில் கைதாகி சிறைக்கு சென்றார், சிறையில் இருந்து தற்போது வெளியே வந்துள்ள நாஞ்சில் முருகேசன் மீண்டும் அதிமுக கொடியை தனது காரில் கட்டிக்கொண்டு தான் மீண்டும் அதிமுகவில் இணைந்தது விட்டதாக பலரிடம் கூறியதாக கூறப்படுகிறது,

இந்நிலையில் அதிமுக குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் அசோகன், குமரி மேற்கு மாவட்ட செயலாளர் ஜான் தங்கம் ஆகியோர் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்த அதிமுகவினர் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டு கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நாஞ்சில் முருகேசன் அதிமுக கொடியை பயன்படுத்துவதை தடுத்து நிறுத்துவதோடு அதிமுகவின் இணைந்து விட்டதாக கூறும் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி கோரிக்கை மனு அளித்தனர்.

Updated On: 6 Feb 2021 5:14 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!