Begin typing your search above and press return to search.
குமரியில் வழக்கமான குற்றவாளிகள் 8 பேர் மீது நன்னடத்தை பிணை வழக்கு
குமரியில் வழக்கமான குற்றவாளிகள் 8 பேர் மீது நன்னடத்தை பிணை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
HIGHLIGHTS
கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுப்படி தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது நன்னடத்தை பிணை வழக்கு பதியப்பட்டு வருகிறது. அதன் படி குமரியில் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது தொடர் நடவடிக்கையாக வழக்கமான குற்றவாளிகள், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தவர்கள், சரித்திர பதிவேட்டு குற்றவாளிகள் என 8 பேர் கண்டறியபட்டனர்.
இதனை தொடர்ந்து அவர்கள் அனைவர் மீதும் நன்னடத்தை பிணை வழக்குகள் பதிவு செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்டார். அதன்படி 8 வழக்கமான குற்றவாளிகள் மீது நன்னடத்தை பிணை வழக்கு நிறைவேற்றபட்டது இதன் மூலம் குற்றவாளிகளின் நடவடிக்கைகள் கட்டுக்குள் கொண்டு வந்து அவர்களை நல்வழி படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.