/* */

குமரியில் 48 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் வேலை நிறுத்தம்

மத்திய அரசிற்கு எதிர்ப்பு தெரிவித்து குமரியில் 48 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

குமரியில் 48 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் வேலை நிறுத்தம்
X

மத்திய அரசின் மீன் படி திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து குமரியில் உள்ள  48 மீனவ கிராமங்களை சேர்ந்தவர்களும் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் தேசிய கடல் சார் மீன் பிடி மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மணக்குடி, பள்ளம், ராஜாக்கமங்களம் உட்பட 48 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் தங்கள் படகுகளில் கருப்பு கொடி கட்டியும், தங்கள் கைகளில் கருப்பு கொடி ஏந்தியும் மத்திய அரசிற்கு எதிரான கண்டன பதாகைகளை ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மசோதா நிறைவேற்றப்பட்டால் தங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் கேள்விக்குறியாகும் என்பதால் மத்திய அரசு புதிய மசோதாவை திரும்ப பெற வேண்டும் என கூறி கோஷங்கள் எழுப்பினர்.

Updated On: 9 Aug 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!