/* */

குமரி அருகே மின் கம்பியில் உரசி தென்னை மரம் எரிந்து சேதம்

குமரியில் சூறை காற்றில் உயர் மின் அளுத்த கம்பியில் உரசி தென்னை மரம் தீ பிடித்து எரிந்தது.

HIGHLIGHTS

குமரி அருகே மின் கம்பியில் உரசி தென்னை மரம் எரிந்து சேதம்
X

நித்திரவிளை அருகே கும்பனாளி பகுதியில் மின் கம்பியில் உரசி தென்னை மரம் திடீரென தீ பிடித்து எரிந்தது.

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே கும்பனாளி பகுதியில் தனி தபர் ஒருவருக்கு சொந்தமான நிலத்தில் நின்றிருந்த தென்னை மரம் அதிகாலை நேரத்தில் திடீரென தீ பிடித்து எரிந்தது.

இதனை அந்த வழியாக நடந்து சென்றவர்கள் கண்டு கூச்சலிடவே நிலத்திற்கு உரிமையாளர் அங்கு வந்து பார்த்த போது தென்னை மரத்தின் அருகே செல்லும் உயர் மின் அழுத்த கம்பி உரசி தீ பிடித்ததை கண்டு மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் கொடுத்து மின்சாரத்தை துண்டித்து உள்ளார்.

தொடர்ந்து அந்த பகுதிக்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு தீ அணைந்த பிறகு உயர் மின்னழுத்த கம்பியில் உரசும்படி நின்றிருந்த தென்னை ஓலைகளை இழுத்து கீழே தள்ளி பாதுகாப்பை ஏற்படுத்தி விட்டு சென்றனர்.

இந்த விபத்து குறித்த தகவல் அறிந்த உடனே மின்வாரிய ஊழியர்கள் விரைந்து செயல்பட்டதால் அருகில் இருந்த டிரான்ஸ்பார்மரில் தீ பிடிக்காமல் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Updated On: 5 Sep 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  2. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  3. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  4. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  6. வீடியோ
    அந்தரத்தில் தொங்கி தவித்த குழந்தை ! திக் திக் பரபரப்பு நிமிடங்கள் !...
  7. வீடியோ
    🔴LIVE: ரஜினி சார் கிட்ட சொன்னேன்!பாக்கலாம்னு சொல்லி விட்டுட்டாரு KS...
  8. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  9. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!