Begin typing your search above and press return to search.
பெண்ணை சரமாரியாக வெட்டியவர் கைது
கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி, திருவள்ளுவர் காலனி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் இவர் நேற்று குடித்துவிட்டு வீட்டில் வந்து அவருடைய மனைவி ஆனந்த ஜோதியிடம் தகராறு செய்தார்.
இதனால் கோபமடைந்த ஆனந்த ஜோதி சுரேஷை திட்டி அவரது செயலை கண்டித்தார். இந்நிலையில் பக்கத்து வீட்டை சேர்த்த ஜெயக்குமார் (46) என்பவர் ஆனந்த ஜோதி தன்னை தான் திட்டுவதாக நினைத்து ஆத்திரமடைந்து ஜோதியை ஆபாச வார்த்தையால் பேசி, கம்பால் அடித்து, அரிவாளால் வெட்டினார்.
தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் வினிஷ் பாபு மற்றும் போலீசார் குற்றவாளி ஜெயக்குமாரை கைது செய்து, அவர்மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.