உள்ளாட்சித் தேர்தல் வெற்றி தேர்தலாக அமையும் : தளவாய் சுந்தரம்
உள்ளாட்சி தேர்தல், வெற்றி தேர்தலாக அமையும் என, கன்னியாகுமரி எம்.எல்.ஏ. தளவாய் சுந்தரம் தெரிவித்தார்.
HIGHLIGHTS
முன்னாள் அமைச்சரும் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில்செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்தில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல், அதிமுகவுக்கு வெற்றித் தேர்தலாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி பதவிகளிலும் அதிமுக மகத்தான வெற்றி பெறும். திமுக ஆட்சியின் குறைகளை மக்களிடம் எடுத்துரைத்து வெற்றி பெறுவோம்.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நெல்லை மாவட்டத்தில் அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். கூட்டுறவு சங்க நகைகடன் பெற்றதில் மோசடி நடந்ததாக, கூட்டுறவு துறை அமைச்சர் உண்மைக்கு புறம்பான தகவலை தெரிவிக்கிறார்.
மோசடியில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு கடன் வாங்கியதில், மோசடி செய்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.