/* */

வீட்டில் சாராயம் காய்ச்சி விற்பனை - சாராய வியாபாரி கைது

முழு ஊராடங்கை பயன்படுத்தி வீட்டில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்த சாராய வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

வீட்டில் சாராயம் காய்ச்சி விற்பனை - சாராய வியாபாரி கைது
X

கன்னியாகுமரி மாவட்டம் அருமநல்லூர் பகுதியில் சாராய விற்பனை படு ஜோராக நடைபெறுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் பூதபாண்டி காவல்நிலைய உதவி ஆய்வாளர் மகேஸ்வரராஜ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

கீழ புளியடி, அருமநல்லூர் பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்த போது அந்த பகுதியில் சந்தேகத்திற்குகிடமாக ஒருவர் நின்று கொண்டு இருப்பதை பார்த்தனர். அவரை பிடித்து விசாரித்த போது அவர் அதே பகுதியை சேர்ந்த ராஜா(33) என்பதும் அவர் சட்டத்துக்கு விரோதமாக வீட்டில் வைத்து சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

தொடர்ந்து அவரை பிடித்து அவரது வீட்டை சோதனை செய்த போது அங்கு 1 லிட்டர் கள்ள சாராயம் மற்றும் 3 லிட்டர் சாராய ஊறல் இருந்ததை கண்டுபிடித்தனர். மேலும் ராஜா மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்ததோடு அவரிடமிருந்த 1 லிட்டர் சாராயம் மற்றும் 3 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்தனர்.

Updated On: 7 Jun 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!