வீட்டில் சாராயம் காய்ச்சி விற்பனை - சாராய வியாபாரி கைது
முழு ஊராடங்கை பயன்படுத்தி வீட்டில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்த சாராய வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
கன்னியாகுமரி மாவட்டம் அருமநல்லூர் பகுதியில் சாராய விற்பனை படு ஜோராக நடைபெறுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் பூதபாண்டி காவல்நிலைய உதவி ஆய்வாளர் மகேஸ்வரராஜ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
கீழ புளியடி, அருமநல்லூர் பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்த போது அந்த பகுதியில் சந்தேகத்திற்குகிடமாக ஒருவர் நின்று கொண்டு இருப்பதை பார்த்தனர். அவரை பிடித்து விசாரித்த போது அவர் அதே பகுதியை சேர்ந்த ராஜா(33) என்பதும் அவர் சட்டத்துக்கு விரோதமாக வீட்டில் வைத்து சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
தொடர்ந்து அவரை பிடித்து அவரது வீட்டை சோதனை செய்த போது அங்கு 1 லிட்டர் கள்ள சாராயம் மற்றும் 3 லிட்டர் சாராய ஊறல் இருந்ததை கண்டுபிடித்தனர். மேலும் ராஜா மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்ததோடு அவரிடமிருந்த 1 லிட்டர் சாராயம் மற்றும் 3 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்தனர்.