Begin typing your search above and press return to search.
முக்கடல் அணை பகுதியில் சிறுத்தை நடமாட்டம்: சிசிடிவி கேமராவில் பதிவு
முக்கடல் அணையில் சிறுத்தை நடமாட்டம் இருக்கும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் வனத்துறையினர் விசாரணை.
HIGHLIGHTS
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளுக்கு வினியோகம் செய்யப்படும் குடிநீர், முக்கடல் அணைப்பகுதியில் பராமரிக்கப்பட்டு வருகின்றது.
இங்கு அமைக்கப்பட்டு உள்ள பூங்காவில் இரு தினங்களுக்கு முன்பு இரவு சிறுத்தை ஒன்று புகுந்தது. 20 நிமிடங்களுக்கு மேல் அங்கு சுற்றி திரிந்த பின் அருகிலுள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிக்கு சென்றது.
இந்த காட்சிகள் பூங்காவில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன் இப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக பொதுமக்கள் மத்தியில் தகவல் பரவிய நிலையில், தற்போதைய சம்பவம் அதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.