Begin typing your search above and press return to search.
கோழிக் கூட்டுக்குள் மறைந்திருந்த 6 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு சிக்கியது
குமரியில் கோழிக் கூட்டுக்குள் மறைந்திருந்த 6 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பை வனத்துறையினர் பிடித்து அடர்ந்த காட்டில் விட்டனர்.
HIGHLIGHTS
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி மங்கம்மா சாலை அருகே ஹாலோ பிளாக் தயாரிக்கின்ற நிறுவனத்தின் அருகே உள்ள கோழி கூண்டில் 6 அடி நீளமுள்ள நல்ல பாம்பு இருந்துகொண்டு கோழியிடம் சண்டை போட்டுக் கொண்டிருப்பதை அப்பகுதி இளைஞர்கள் பார்த்தனர்.
இது குறித்து ஆரல்வாய்மொழி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் வனசரகர் திலீபன் உத்தரவின் பேரில் வேட்டை தடுப்பு காவலர் ஜெகன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாம்பினை பிடித்து அடர்ந்த காட்டு பகுதியில் விட்டார்.
சுமார் 1 மணி நேரமாக போக்கு காட்டி வந்த பாம்பை கோழி கூண்டை விட்டு நகர விடாமல் இளைஞர்கள் தடுத்த நிலையில் ஆக்ரோஷத்துடன் காணப்பட்ட பாம்பு இறுதியில் வனதுறையிடம் சிக்கி கொண்டது.