Begin typing your search above and press return to search.
குமரியில் அனுமதியின்றி மண் அள்ளிய ஜேசிபி மற்றும் டெம்போ பறிமுதல்
குமரியில் அனுமதியின்றி மண் அள்ளிய ஜேசிபி மற்றும் டெம்போவை பறிமுதல் செய்து வருவாய் துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
HIGHLIGHTS
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை தாசில்தார் பூதப்பாண்டி அடுத்த நாவல்காடு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, எதிரே மண் ஏற்றிக்கொண்டு ஒரு டெம்போ வந்தது.
சந்தேகம் அளிக்கும் வகையில் வந்த அந்த டெம்போவை தடுத்தி நிறுத்திய தாசில்தார் தலைமையிலான வருவாய் துறையினர் அதனை சோதனையிட்ட போது எந்த அனுமதியும் இல்லாமல் மண் ஏற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து டெம்போவை பறிமுதல் செய்ததோடு, தொடர்ந்து அந்த பகுதியில் மண் எடுக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஜேசிபி-யும் பறிமுதல் செய்யப்பட்டது.