/* */

கடல் சீற்றம் காரணமாக தூண்டில் வளைவு சேதம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் சீற்றம் காரணமாக தூண்டில் வளைவு சேதம் அடைந்ததால் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் தவித்தனர்.

HIGHLIGHTS

கடல் சீற்றம் காரணமாக தூண்டில் வளைவு சேதம்
X

படகுகள் கடற்கறையில் நிறுத்தப்பட்டு இருக்கும் காட்சி.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுவாக ஆனி, ஆடி மாதங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படுவது வழக்கம், அதன் படி இந்த வருடமும் அவ்வப்போது கடல் சீற்றத்துடன் காணப்பட்டு வருகிறது.

இதனிடையே கோவளம் கடற்பகுதியில் பலத்த கடல் சீற்றம் காரணமாக அங்குள்ள தூண்டில் வளைவு சேதமடைந்தது. இதன் காரணமாக நாட்டுப்படகுகளை நம்பி வாழும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

கடல்சீற்றம் மற்றும் பலத்த காற்று போன்ற நேரங்களில் தூண்டில் வளைவே தங்களுக்கு பாதுகாப்பு என கூறும் மீனவர்கள் தூண்டில் வளைவு சேதம் ஆனதால், ஏற்கனவே பல படகுகள் சேதம் அடைந்திருப்பதாக மீனர்வர்கள் கவலை தெரிவித்தனர்.

மேலும், பலமுறை ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் வந்து பார்த்தும் தூண்டில் வளைவு சீரமைத்து தர வில்லை எனக் கூறும் மீனவர்கள் உடனடியாக தூண்டில் வளைவை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Updated On: 17 July 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!