Begin typing your search above and press return to search.
குமரியில் இருந்து டெல்லி செங்கோட்டைக்கு சைக்கிளில் விழிப்புணர்வு பயணம்
குமரியில் இருந்து டெல்லி செங்கோட்டைக்கு சி.ஆர்.பி.எப் வீரர்கள் சைக்கிளில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டனர்.
HIGHLIGHTS
நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அதனை கௌரவிக்கும் வகையிலும் தேச பக்தி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொண்டனர்.
தென் மண்டல CRPF சார்பில் கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் கடற்கரையில் இருந்து, ராதாகிருஷ்ணன் (DIG , CRPF திருவனந்தபுரம் ) தலைமையில் 15 துணை ராணுவத்தினர் சைக்கிளில் விழிப்புணர்வு பயணமாக சென்றனர்.
முன்னதாக டெல்லி செங்கோட்டை வரை செல்லும் பயண தொடக்க விழா கலை நிகழ்சிகளுடன் தொடங்கியது, வரும் அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று டெல்லி செங்கோட்டையில் பயணம் நிறைவு பெறுகிறது.
நிகழ்ச்சியில் தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.