/* */

காஞ்சிபுரம் : தொடர் மழை காரணமாக கிராம நீர்நிலைகள் நிரம்பியதால் பறவைகள் தஞ்சம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்த கன மழையால் கிராம ஏரி நீர் நிலைகள் நிரம்பி வழிவதால் பறவைகள் கூட்டம் ஏரிகளில் தஞ்சம் அடைந்துள்ளது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் : தொடர் மழை காரணமாக கிராம நீர்நிலைகள் நிரம்பியதால் பறவைகள்  தஞ்சம்
X

காஞ்சிபுரம் அடுத்த மேல்பேரமநல்லூர் ஏரியில் தஞ்சம் கொண்டுள்ள பறவைகள் கூட்டம்.

தமிழகத்தில் ஏற்பட்ட வானிலை மாற்றம் காரணமாக கடந்த செவ்வாய்க்கிழமை காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் வாலாஜாபாத் உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

இந்த கனமழை காரணமாக கிராமங்களில் உள்ள சிறிய ஏரிகள் நிரம்பி வழிகிறது. தற்போது அறுவடை முடித்து மீண்டும் பயிர் பருவம் துவங்கியுள்ளதால் நிலங்களில் விவசாயிகள் ஏர் உழுது தயார் நிலையில் வைத்துள்ளனர்.

பறவைகள் நிலங்களில் உள்ள மண்புழு நெல்மணிகள் உள்ளிட்டவைகளை உணவு உட்கொள்ள வரும் நிலையில் ஏரிகளில் உள்ள அடர்ந்த மரங்கள் உள்ளதால் மாலை நேரங்களில் அதிகளவு பறவைகள் தஞ்சம் அடைகிறது.

இவைகள் எழுப்பும் ஒலி கிராம மக்களுக்கு இனிமையாகவும் அதேநேரம் தங்கள் கிராமம் மற்றொரு வேடந்தாங்கலாக மாறியதும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

அதிகாலையில் இரை தேட கிளம்ப பறவைகள் எழுப்பும் ஓசை தாங்களும் அதிகாலையில் எழுந்து விவசாய வேலைகளைப் பார்க்க இது பெரிதும் உதவுகிறது எனவும் தெரிவித்தனர்.

Updated On: 10 Oct 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்