/* */

காஞ்சிபுரம் அருகே குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தாய், தானும் தூக்கிட்டு தற்கொலை

காஞ்சிபுரம் அருகே குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தாய், தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் அருகே குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தாய், தானும் தூக்கிட்டு தற்கொலை
X

காஞ்சிபுரம் அருகே குழந்தைக்கு விஷம் கொடுத்து  கொலை செய்த தாய் தானும் தற்கொலை செய்து கொண்டவரின் வீட்டை உறவினர்கள் உடைத்து உள்ளே சென்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் , வாலாஜாபாத் அடுத்த உள்ளாவூர் கிராமம் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் முருகன், இவரது மனைவி உமா. இவர்களுக்கு தீபிகா என்ற 6 வயது மகள் உள்ளார்.

இவர்கள் இருவரும் குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டிற்குள் உள்ள தனி ரூம்களில் தனித்தனியாக சமையல் செய்து சாப்பிட்டு வசித்து வந்துள்ளனர்.முருகன் தனியார் கம்பெனியில் ஹவுஸ் கீப்பராக வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாகவே மன அழுத்தத்தில் இருந்த உமா நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது கதவை மூடிக்கொண்டு 6 வயது மகள் தீபிகாவிற்கு டீயில் எரும்பு பவுடர் கலந்து கொடுத்து இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாலவாக்கம் போலீசார் மூடியிருந்த கதவை உடைத்து தற்கொலை செய்து கொண்டிருந்த உமாவையும், அவரது குழந்தை தீபிகாவையும் சடலமாக மீட்டனர்.

இதையடுத்து இருவரையும் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இச்சம்பவம் குறித்து சாலவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 23 Jun 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்