/* */

அரசு கொள்முதல் செய்த 8 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழையால், அரசால் கொள்முதல் செய்யப்பட்ட 8000 நெல் மூட்டைகள், அதிகாரிகளின் அலட்சியத்தால் மழையில் நனைத்து சேதமடைந்தது.

HIGHLIGHTS

அரசு கொள்முதல் செய்த 8 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்
X

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில், கொள்முதல் செய்யப்பட்ட  நெல் மூட்டைகள் மழையில் நனைத்து சேதமடைந்தது.

காஞ்சிபுரம் , செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கடந்த ஒருவார காலமாகவே வானிலை மாற்றம் காரணமாக மாலை நேரங்களில் கன மழை பெய்து வருகிறது. நேற்று மாலை துவங்கிய மழை அதிகாலை வரை நீடித்தது.

இந்நிலையில் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிக விளைச்சல் காரணமாக பல்வேறு இடங்களில் நேரடி நெல் கொள்முதல் செயல்பட்டது. அங்கு கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் நெல்வாய் என்ற பகுதியில் ஒருங்கிணைக்கப்பட்டு அங்கிருந்து அறவை நிலையங்களுக்கு செல்லும் நிலை உருவாகியது.

இங்கு கடந்த காலங்களில் கொள்முதல் செய்யப்பட்ட 8000 மூட்டைகள் நேற்று பெய்த கனமழையால் அனைத்தும் நனைந்து வீணாகியது.,

கடந்த சில தினங்களாக மழை வருவது தெரிந்ததும் அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் சரிவர எடுக்காததால் அனைத்தும் நனைந்து அரசுக்கு வருவாய் இழப்பு மட்டுமல்லாமல் தரமற்ற பொருட்களை உற்பத்தி செய்யும் நிலைக்கு தற்போது தள்ளப்பட்டுள்ளது.

அரசு அதிகாரிகளின் இச்செயல் விவசாயிகள் இடையே பெருத்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இனிவரும் காலங்களிலாவது அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என விவசாயிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Updated On: 9 July 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்