/* */

விடுதி கழிவுநீர் ஏரியில் கலப்பு: குடியிருப்புவாசிகள் முகம் சுளிப்பு

திருமால் நகரில், தனியார் விடுதி கழிவுநீரால் குடியிருப்பு பகுதி மற்றும் ஏரிகள் மாசடைவதாக, பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

HIGHLIGHTS

விடுதி கழிவுநீர் ஏரியில் கலப்பு: குடியிருப்புவாசிகள் முகம் சுளிப்பு
X

விடுதி கழிவுநீர் வெளியேறி, பாதிப்படைவதாக, பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

காஞ்சிபுரம் மாவட்டம் , ஸ்ரீபெரும்புதூர் அடுத்த போந்தூர் ஊராட்சிக்குட்பட்ட திருமால் நகர் பகுதியில் தனியார் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு, 500க்கும் மேற்பட்டோர் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து கொண்டு, பெண்கள் தங்கியுள்ளனர்.

மேலும் இங்கிருந்து வெளியேறும் கழிவுநீர், முறையாக சுத்திகரிக்கப்படாமல் அப்படியே வெளியேற்றி வருவதால, அப்பகுதியில் மிகுந்த துர்நாற்றம் வீசுகிறது எனவும், நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது எனவும், அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி, விடுதியினை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.

இந்த கழிவு நீர், அருகிலுள்ள பிள்ளைப்பாக்கம் ஏரி வழியாக சென்னைக்கு குடிநீர் வழங்க கூடிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்கிறது. எனவே, கழிவு நீர் வெளியேற்றப் பிரச்சனையை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கவனத்தில் கொண்டு சென்று, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பொதுமக்கள் தெரிவித்தனர்.

Updated On: 11 Dec 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்