/* */

குட்கா விற்ற 52 கடைகள் மீது வழக்கு பதிவு, 60 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்

ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் குட்கா விற்பனை செய்த 52 கடைகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, 60 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

குட்கா விற்ற 52 கடைகள் மீது வழக்கு பதிவு, 60 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்
X

பைல் படம்

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பான் மசாலா பொருட்களை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழக சுகாதார மற்றும் நல்வாழ்வு துறை அமைச்சர் மா, சுப்பிரமணியம் காவல்துறைக்கு அறிவுறுத்தினார்.

அவ்வகையில் ஸ்ரீபெரும்புதூர் காவல் கோட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா பொருட்களை விற்று 52 கடைகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூபாய் 60 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்து எச்சரித்தனர்.

மேலும் இவ்வாறு அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம். சுதாகர் தெரிவித்துள்ளார்.

Updated On: 25 July 2021 3:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...