/* */

பூந்தண்டலம் ஊராட்சி வாக்குசாவடியில் மீண்டும் நாளை வாக்குபதிவு

குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய பூந்தண்டலம் கிராம ஊராட்சியில் நிறுத்தப்பட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பூந்தண்டலம் ஊராட்சி வாக்குசாவடியில் மீண்டும் நாளை வாக்குபதிவு
X

பைல் படம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் ஒன்றியங்களில் நேற்று நடைபெற்றது.

வாக்குப்பதிவின் போது குன்றத்தூர் ஊராட்சி ஓன்றியத்திற்குபட்ட பூந்தண்டலம் ஊராட்சி ஒன்றிய வார்டு எண் 12 காண உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளரின் பெயர் சின்னம் வாக்குச்சீட்டில் இல்லை எனக்கூறி வேட்பாளரின் எதிர்ப்பால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் வட்டார தேர்தல் மேற்பார்வையாளர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் உள்ளிட்டோர் விசாரணையை மேற்கொண்ட பின் இன்று அறிவிப்பு வெளியானது.

இந்த அறிவிப்பில் , குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு வார்டு 12 க்கான உறுப்பினர் தேர்தல், பூந்தண்டலம் ஊராட்சி வாக்கு சாவடி எண்-173 ( அனைத்து வாக்காளர்களும்) ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, புதுச்சேரி வாக்குச்சாவடியில் நாளை திங்கட்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மீண்டும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த ஒரு வாக்குச்சாவடியில் மட்டும் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 10 Oct 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்