ஸ்ரீநட்சத்திர விருட்ச விநாயகர் கோயிலுக்கு குடைகளை காணிக்கையாக வழங்கிய விஜயேந்திரர்
நட்சத்திர விருட்ச விநாயகர் கோயிலுக்கு காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் திருக்குடைகளை காணிக்கையாக வழங்கினார்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் சுற்றியுள்ள பல்வேறு திருக்கோயிலுக்கு தேவையான பூஜை சாமான்கள், கற்சிலைகள், திருவிழா உபகரணங்கள் நன்கொடை பெறுவதும் , மகா கும்பாபிஷேக விழாக்களில் கலந்துகொள்ள வேண்டியும் காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கர மடத்தில் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து அழைப்பது வழக்கம்.
காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உக்கம் பெரும்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ளது நட்சத்திர விருட்ச விநாயகர் திருக்கோயில்.
அவ்வகையில் அவர்களின் கோரிக்கையினை ஏற்று ஓரிக்கை மகா பெரியவர் மணிமண்டபத்தில் திருக்குடைகள் வழங்கும் விழா நடைபெற்றது.
முன்னதாக இரு திருக்குடைகளும் மங்கள மேள வாத்தியங்களுடன் கோ பூஜை செய்யபட்டு , மணிமண்டப சுற்றுப் பிரகாரத்தில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இரு திருக்குடைகளை நட்சத்திர விருட்ச விநாயகர் திருக்கோயிலின் தலைவர் சுவாமிநாத ஐயர்,செயலாளர் பாண்டுரெங்கன்,கோயில் ஆலோசகர் ஆடிட்டர் ரமேஷ் ஆகியோரிடம் வழங்கினார்.