/* */

காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலின் உண்டியல் காணிக்கை ரூ.65 லட்சம்

காஞ்சிபுரம் அத்திவரதர் புகழ்பெற்ற வரதராஜ பெருமாள் கோயில் அமைக்கப்பட்டுள்ள ஐந்து உண்டியலில் 120 பேர் கொண்ட குழுவினர் நேற்று காணிக்கை எண்ணும் பணியை மேற்கொண்டனர்.

HIGHLIGHTS

காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலின் உண்டியல் காணிக்கை ரூ.65 லட்சம்
X

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் 5 உண்டிகளில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணும் குழுவினர் மற்றும் அதை கண்காணிக்கும் அதிகாரிகள்.

கோயில் நகரம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் நகரில் பல திவ்ய தேசங்களும் பல உலக புகழ்பெற்ற கோயில்களும் அமைந்துள்ளது. இதனைக் கண்டு ரசிக்கவும், தரிசிக்கவும் நாள்தோறும் வெளிநாடு, வெளி மாநில மற்றும் தமிழக பக்தர்கள் ஆயிரக்கணக்கில் வந்து செல்கின்றனர்.

இது மட்டுமல்லாது தங்களது ஜாதக தோஷத்தை நீக்கவும், பல்வேறு சிறப்பு பூஜைகளை புகழ்பெற்ற திருக்கோயில்களில் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக நோய் தீர்க்கும் சந்தைவெளியம்மன் திருக்கோயிலில் அம்மை நோயை தீர்க்கும் புகழ் பெற்றதால் அங்கு வருவதும், காமாட்சி அம்மன் திருக்கோயில் பல்வேறு தியாகங்கள் மேற்கொள்வதும் வழக்கமாக நடைபெற்று வருகிறது.

அவ்வகையில் உலக புகழ்பெற்ற அத்தி வருவதற்கு திருக்கோயில் என அழைக்கப்படும் வரதராஜ பெருமாள் திருக்கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குவதும், தங்கபல்லி சாபம் விலவகுவதால் பல வட மாநில பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.

அதேபோல் தைப்பூசம் திருவிழாவைக்காக மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி திருக்கோயிலுக்கு அதிக அளவில் வரும் பக்தர்கள் காஞ்சி கோயில்களையும் கண்டு தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

மேலும் இக் கோவிலைக் கண்டு தரிசிக்கும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்த கோயிலில் 10 உண்டிகள் வைக்கப்பட்டுள்ளது. இவைகளை எண்ணுவதற்கு இரு சுழற்சி முறைகளில் ஐந்து உண்டியலாக பிரித்து எண்ணுவது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் தியாகராஜன், ஆய்வர் ப்ரீத்திகா , இந்து சமய அறநிலைத்துறை செயல் அலுவலர் வேதமூர்த்தி ,சின்ன காஞ்சிபுரம் இந்தியன் வங்கி மேலாளர் முத்துச்செல்வி ஆகியோர் முன்னிலையில் சென்னையைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு குழு உறுப்பினர்கள் 120 பேர் உண்டியல் எண்ணும் பணியை காலை 8 மணிக்கு துவங்கினர்.

மாலை 7 மணி வரை நடைபெற்ற இப்பணியை அவ்வப்போது இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

5 உண்டியல் முழுவதும் திறக்கப்பட்டு பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் தங்கம் வெள்ளி என வகைப்படுத்தப்பட்டு வங்கி ஊழியர்கள் மூலம் சரிபார்க்கப்பட்டதில் மொத்தமாக பக்தர்கள் 65 லட்சத்தில் 64 ஆயிரத்து நூத்தி ஐம்பத்தி எட்டு ரூபாயை காணிக்கையாக செலுத்தியது தெரியவந்தது.

இதேபோல் தங்கப் பொருட்களாக 211. 300 கிராம் தங்கம் 450.600 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைக்கப்பெற்றது.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறிய போது , நான்கு மாதங்களுக்குப் பிறகு ஐந்து உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டதாகவும், இவை அனைத்தும் வங்கியில் முதலீடாக செலுத்தப்பட்டது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

Updated On: 30 Dec 2022 4:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  3. லைஃப்ஸ்டைல்
    ஸ்ரீ கிருஷ்ணரின் ஞான வார்த்தைகள் !
  4. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  6. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  7. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    50 சிறந்த மகளிர் தின வாழ்த்துச் செய்திகள்!
  9. ஈரோடு
    அந்தியூர் பகுதியில் பரவலாக மழை: சேற்றில் சிக்கிய அரசு பேருந்து
  10. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை