இளநீர் வியாபாரியை கொலை முயற்சி செய்ய முயன்ற 4 பேர் கைது
இளநீர் வியாபாரியை வெட்டிக் கொலை செய்ய முயன்ற அதே ஊரை சேர்ந்த நான்கு பேரை தாலுகா போலீஸார் கைது செய்தனர்
HIGHLIGHTS
காஞ்சிபுரம் அடுத்த விப்பேடு கிராமத்தை சேர்ந்த இளைஞர் வியாபாரி தனசேகர் இன்று அதிகாலை கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவில் தெருக்கூத்து நாடகம் நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த போது மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் தாக்கினர்.
பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்றதால் அலறியடித்து ஓடிய கூட்டத்தை கண்டு மர்ம நபர்கள் ஓட்டம் பிடித்ததை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தாலுகா காவல் துறையினர் அதிர்ச்சியடைந்தனர். மர்ம நபர்களை துரத்தி சென்ற காவல்துறையிடம் பிடிபடாமல் வேகத்தில் தப்பிச் சென்றனர். காயமடைந்த தனசேகரை மீட்டு சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காஞ்சி தாலுகா காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
தாலுகா காவல் ஆய்வாளர் ராஜகோபால் தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அதே விப்பேடு கிராமத்தை சேர்ந்த சந்தானம்(33) ,2. அஜித்குமார்(27), .ரவி (50) , கார்த்திக் (26)., ஆகிய நான்கு பேரை கைது செய்து வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர். சம்பவம் நடந்த பத்து மணி நேரத்திற்குள் குற்றவாளிகளைக் கைது செய்த காவல்துறை நடவடிக்கை பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.