செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 200 கன அடி உபரி நீர் திறப்பு.
அடையாறு ஆற்றின் கரையோரம் உள்ள தாழ்வான பகுதிகள் மற்றும் 6 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்வரத்து மற்றும் மழை காரணமாக காலை 10 மணிக்கு 200 கன அடி நீர் திறக்கப்பட்டது..
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வானிலை மாற்றம், குறைந்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 10 தினங்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது.
சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரி காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியில் அமைந்துள்ளது. இந்த பகுதிகளில் கடந்த ஒரு வார காலத்தில் குன்றத்தூரில் 91.6 மில்லி மீட்டர் செம்பரம்பாக்கம் பகுதியில் 70 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவான 24 அடியில் தற்போது 22.29 அடி நீர் உள்ளது. 3.645 டிஎம்சி தண்ணீர் கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் தற்போது 3.195 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது.
மேலும் நீர்வரத்து 452 கன அடி நீர் உள்ள நிலையில் தற்போது 163 கன அடி நீர் வெளியேறி வருகிறது. தொடர் மழை மற்றும் நீர் வரத்து காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் பாதுகாப்புக் கருதி இன்று காலை 10 மணிக்கு 200 கன அடி நீர் வெளியேற்றப்பட உள்ளது.
மேலும் நீர் வெளியேறும் நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியை ஒட்டி உள்ள சிறுகளத்தூர் காவனூர் குன்றத்தூர் வழியம்பேடு திருநீர்மலை மற்றும் அடையார் ஆற்றின் கரையோரம் உள்ள தாழ்வான பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கையாக வெளியிட்டுள்ளது.
இதேபோல் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 381 ஏரிகளில் 45 ஏரிகள் முழு கொள்ளளவையும் 35 ஏரிகள் 75 சதவீதத்தையும் நீர் இருப்பை பெற்றுள்ளது.
சென்னை திருவள்ளூர் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் அடங்கிய பாலாறு உப வடி நிலகோட்ட கட்டுப்பாட்டில் உள்ள 102 ஏரிகளில் 173 ஏரிகள் முழு கொள்ளளவையும் 220 ஏரிகள் 75% நீர் இருப்பை பெற்றுள்ளதாக பொதுப்பணித்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
காலை முதலே காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழைப்பொழிவு நின்றுள்ளது குறிப்பிடத்தக்கது.