/* */

திருநங்கைகள் ரேஷன் கார்டு பெற சிறப்பு முகாம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டை பெறாத திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

HIGHLIGHTS

திருநங்கைகள் ரேஷன் கார்டு பெற சிறப்பு முகாம்
X

காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருநங்கைகள் ரேஷன் கார்டு கேட்டு இன்று நடந்த சிறப்பு முகாமில் மனு அளித்தனர்.

தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு பயன்படும் வகையில் நியாய விலைக் கடைகள் மூலம் அரிசி, சர்க்கரை, பருப்பு , எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் வழங்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் அனைவருக்கும் அனைத்து பொருளும் கிடைக்கும் வகையில் குடும்ப அட்டைகளை தரம்பிரித்து வாரம் தோறும் 7 நாட்கள் ஊழியர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 400-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வளத்தோட்டம், செரப்பனஞ்சேரி, பூக்கடை சத்திரம் உள்ளிட்ட காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் வசித்து வருகின்றனர்.

இவர்கள் ஏற்கனவே நலவாரிய அட்டை ஆதார் அட்டை உள்ளிட்டவை பெற்றிருந்தாலும் பலருக்கு ரேஷன் அட்டை இல்லை என்பதால் பொருட்கள் பெற இயலவில்லை எனவும் அரசு வழங்கும் நல திட்டங்களும் தங்களுக்கு கிடைப்பதில்லை என புகார் தெரிவித்து வந்தனர்.

அதன் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் திருநங்கைகளுக்கான ரேஷன் அட்டை வழங்குதல் சம்பந்தமான கோரிக்கை மனு பெறப்பட்டது.

காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் புதிய குடும்ப அட்டை வழங்குதல் தொடர்பாக தனி வட்டாட்சியர் திரு வாசுதேவன் தலைமையிலான குழுவினர் இன்று சுமார் 20 திருநங்கைகளிடம் இருந்து குடும்ப அட்டை கோரி மனு அளித்தனர்.

இம்முகாமில் திருநங்கைகள் கலந்து கொண்டு குடும்ப அட்டை கோரி அத்தாட்சிகள் உடன் மனு அளித்தனர். இவர்களுக்கு உதவியாக களப்பணியாளர்கள் ஜானகி, .தானியா உள்ளிட்டோர் உடனிருந்து உதவினர்.

Updated On: 8 Jan 2022 8:00 AM GMT

Related News

Latest News

  1. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  2. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  3. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  4. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  5. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  6. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  7. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  8. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  9. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  10. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...