காஞ்சிபுரம் அருகே தாயை தாக்கிய ரவுடி தம்பியை வெட்டிக் கொன்ற அண்ணன்
காஞ்சிபுரம் அடுத்த களியனூர் பகுதியில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்ட தம்பியை வெட்டிக் கொலை செய்த அண்ணன்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் அடுத்த களியனூர் பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி தட்சிணாமூர்த்தி. இவருக்கு லிங்கேஸ்வரன் மற்றும் தேவபிரகாஷ் என இரு மகன்கள் உள்ளனர்.
லிங்கேஸ்வரன் தனியார் கல்லூரியில் பி காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். தம்பி தேவபிரகாஷ் ஒன்பதாம் வகுப்பு வரை படித்துள்ளார். நேற்று இரவு மதுபோதையில் தேவ பிரகாஷ் தனது தாயார் முகிலாவிடம் தகராறு செய்துள்ளார் இதை தட்டி கேட்ட லிங்கேஸ்வரனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தூங்கி கொண்டிருந்த தேவபிரகாஷை லிங்கேஸ்வரனை கத்தியால் பல்வேறு இடங்களில் வெட்டியுள்ளார். இதில் தேவபிரகாஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து வாலாஜாபாத் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கல்லூரி மாணவர் லிங்கேஸ்வரன் தலைமறைவான நிலையில் அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கொலையுண்ட தேவபிரகாஷ் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டவர் என்பதும், மதூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கில் குற்றவாளி என்பதும் குறிப்பிடத்தக்கது.