/* */

ரஜினிகாந்த்-ஓபிஎஸ் சந்திப்பு : அரசியலுக்கு பஞ்சம் இருக்காது..!

நாளை காஞ்சிபுரத்தில் ஓபிஎஸ் அணி சார்பாக புரட்சி பயண தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் உரையாற்றுகிறார்.

HIGHLIGHTS

ரஜினிகாந்த்-ஓபிஎஸ் சந்திப்பு : அரசியலுக்கு பஞ்சம் இருக்காது..!
X

நாளை கலியனூர் பகுதியில் நடைபெற உள்ள அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் புரட்சி பயண தொடக்க விழா கூட்டமேடை பணிகளை பார்வையிட்ட கழக ஒருங்கிணைப்பாளர் ஜேசிடி பிரபாகரன் மற்றும் மாவட்ட கழக செயலாளர் ஆர் வி ரஞ்சித் குமார்.

நாங்கள்தான் உண்மையான அதிமுக, தனி கட்சி துவங்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் கூறும் ஓபிஎஸ் நடிகர் ரஜினிகாந்த் -ஐ நேரில் சந்தித்தார். அவர்களது சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஓபிஎஸ் ரஜினி சந்திப்பால் அரசியலுக்கு சில நாட்களுக்கு பஞ்சம் இருக்காது என நாளை நடைபெற உள்ள பொதுக் கூட்டத்தில் மேடை அமைக்கும் பணிகளை பார்வையிட்ட பின் ஓபிஎஸ் அணி துணை ஒருங்கிணைப்பாளர் ஜே. சி. டி பிரபாகர் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினார்கள். .

நாளை காஞ்சிபுரம் அடுத்துள்ள களியனூர் பகுதியில், முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கலந்து கொள்ளும், புரட்சிப் பயண துவக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.


இதற்கான சிறப்பு ஏற்பாட்டினை, காஞ்சிபுரம் ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் ரஞ்சித்குமார் சார்பில் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக நாளை நமதே, நாற்பதும் நமதே என்ற வாசகம் அடங்கிய நாடாளுமன்றத்துடன் கூடிய மேடை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருவதை, ஓபிஎஸ் அணி துணை ஒருங்கிணைப்பாளர் ஜேசிடி பிரபாகரன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, வரும் ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் , ஆர்.வி. ரஞ்சித் குமாருக்கு இறுதிக்கட்டத்தில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.

இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது :

இன்று காலை ரஜினிகாந்தை ஓபிஎஸ் அவர்கள் சந்தித்த உடனே, ஊடகங்களில் அவை மிகப்பெரிய செய்தி ஆக்கி உள்ளன. தமிழகத்தில் ஒரு மாற்றம் வரப்போகிறது; ஒரு ஏற்றம் வரப்போகிறது. நாளை இந்த தமிழகம் எதிர்பார்க்கும் மாற்றமும், ஏற்றமும் அளிக்கும் கூட்டமாக இது அமையும்.


ரஜினிகாந்துடன் நடைபெற்ற சந்திப்பு ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது. அந்த சந்திப்பில் என்ன நடந்தது என்பது குறித்து ஓபிஎஸ் அவர்கள் அறிவிப்பார். ஒரு மணி நேரம் , தமிழகத்தில் மக்கள் விரும்பும் இரு பெரும் தலைவர்கள் சந்திக்கும் பொழுது, எல்லாவற்றையும் பேசியிருப்பார்கள் அதில் ' அரசியலுக்கு பஞ்சம் இருக்காது ' என கருதுகின்றேன்.

இந்த புரட்சி பயணத்தில் , டிடிவி தினகரன் மற்றும் சசிகலா இணைந்து கொள்வார்களா என எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில், அவர்கள் மட்டுமல்ல இன்னும் பலரும் கலந்து கொள்வார்கள். இதுதான் உண்மையான அதிமுக. நாங்கள்தான் உண்மையான அதிமுக தனிக் கட்சி துவங்க வேண்டிய அவசியம் இல்லை.

இந்த புரட்சிப் பயணம் முடியும் பொழுது, மக்கள் யாரை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் , யார் பக்கம் இந்த கட்சி இருக்கிறது என்பதை இந்த நாடு பார்க்கப்போகிறது.

திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு சரியான பதிலடியை, கொடுக்கும் கூட்டமாக நாளை நடைபெற உள்ள கூட்டம் அமையும். திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எதிராக கொடுக்கப்பட்டுள்ள அம்புகள் எல்லாம் நிச்சயமாக தெரியவரும். 40 தொகுதிகளிலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான் போட்டியிடும். ஓபிஎஸ் அவர்கள் தொண்டர்களின் தலைவராக நிச்சயமாக அவர் தலைமை ஏற்பார் என தெரிவித்தார்.

Updated On: 2 Sep 2023 1:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே.. நண்பனே.. நண்பனே...!
  2. நாமக்கல்
    கோர்ட் உத்தரவின்படி இழப்பீடு செலுத்ததாத கான்ட்ராக்டர் நுகர்வோர்...
  3. லைஃப்ஸ்டைல்
    சொத்து இல்லைன்னாலும் கெத்து இருக்கணும்..!
  4. லைஃப்ஸ்டைல்
    கோடைக் காலத்துல ஈஸியா எடையை குறைக்கலாம்! எப்படி தெரியுமா?
  5. தொண்டாமுத்தூர்
    நகை பறிப்பு, திருட்டு கொள்ளை சம்பவங்கள் கோவையில் அதிகரித்துள்ளது :...
  6. லைஃப்ஸ்டைல்
    வீரர்கள் சாப்பிடும் ஊட்டச்சத்து மிக்க உணவுகள் எவை தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    ‘மாற்றம் ஒன்றே மாறாதது’ - மாற்ற முடியாத மாற்றங்களை (ஏ)மாற்றமின்றி...
  8. லைஃப்ஸ்டைல்
    உங்க குழந்தைக்கு இதெல்லாம் குடுங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    உங்க குழந்தையோட நோய் எதிர்ப்பு சக்தி!
  10. வீடியோ
    🔴LIVE : BJP Tamilnadu State President K.Annamalai | Press Meet...