/* */

பிரசாரத்திற்கு சொன்ன டைமுக்கு வராத பிரேமலதா! பொதுமக்கள் அவதி

காஞ்சிபுரத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் அதிமுகவை ஆதரித்து காலை 10 மணிக்கு பிரச்சாரம் மேற்கொள்வார் எனக் கூறிய நிலையில் 12 மணிக்கு கடும் வெயிலில் பிரசாரம் மேற்கொண்டார்.

HIGHLIGHTS

பிரசாரத்திற்கு  சொன்ன டைமுக்கு வராத பிரேமலதா! பொதுமக்கள் அவதி
X

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட நபர்கள் வெயில் தாக்கத்திலிருந்து மீள தலையில் சேலையை மூடியபடி காத்திருந்த காட்சி..

பிரச்சாரத்திற்கு தலைவர்களே சொன்ன டைமுக்கு வாங்க.. கடும் வெயில் காஞ்சியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் அவதிப்பட்ட முதியோர்கள் நிலை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழக முழுவதும் கோடை வெப்பம் தற்போது இரண்டு முதல் ஐந்து டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்துள்ளதாகவும், முதியோர்கள், கால்நடைகள் என அனைத்து தரப்பினரும் இந்த வெப்ப அலையிலிருந்து காத்துக் கொள்ள வேண்டும் என அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

குறிப்பாக தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருவதால் பிரச்சாரங்களில் முதல் நிலை தலைவர்கள் தீவிரமாக உள்ளனர்.

கோடை வெப்பம் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை வெப்ப அலை வீசுவதும் , அதன்பின் எந்தவித குளிர்ந்த காற்றும் இல்லாததால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்குகள் சேகரிக்க காலை 10 மணிக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

பிரச்சாரக் கூட்டத்திற்கு வந்தபோது வெய்யில் கொடுமை தாங்காமல் குடைக்குள் இளைப்பாறிய பெண்கள்

இதனால் விஜயகாந்த் இறப்பிற்கு பின் பிரேமலதாவை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என பல சுற்றுப்பட்டி கிராமங்களில் இருந்து ஏராளமான பெண்கள், 50 -65 வயது தாண்டிய மூத்த குடிமக்கள் அதிக அளவில் கூடியிருந்த நிலையில், வெப்பம் தாங்காமல் அருகில் இருந்த கடைகளின் வாயிலில் பல மணி நேரம் தஞ்சம் அடைந்தனர்.

மேலும் பெண்கள் தங்கள் புடவை முந்தானையினை கொண்டு தலையை வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் வண்ணம் ஈடுபட்டனர். அருகில் இருந்த குடை , சிறிய கடைகள், ஒலிபெருக்கியின் நிழல் என அனைத்திலும் தஞ்சமடைந்து காணப்பட்ட காட்சி பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது.

கூட்டத்திற்காக அழைத்து வரப்பட்டிருந்தாலும் இது போன்ற மூத்த குடிமக்கள் தற்போதைய காலத்தில் இதனை தவிர்க்கலாம் என அருகில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.

Updated On: 3 April 2024 12:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...