Begin typing your search above and press return to search.
புதுவை மாநில கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சாமிதரிசனம்
புதுவை மாநில துணை நிலை ஆளுநரும் , தெலுங்கானா மாநில ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் நடைபெற்ற லலிதா சஹஸ்ர நாம ஹோமம் மற்றும் சிறப்பு பூஜையில் கலந்துகொண்டார்
HIGHLIGHTS
தெலுங்கானா மாநில ஆளுநரும் , புதுவை மாநில துணை நிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் காஞ்சிபுரம் புகழ்பெற்ற காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்திற்கு வருகை புரிந்தார்.
காஞ்சிபுரம் வருகை புரிந்த அவரை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .சுதாகர் ஆகியோர் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர்.
காமாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற சிறப்பு ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம ஹோமத்தில் கலந்து கொண்டார் அதன் பின் ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்பாளை சிறப்பு தரிசனம் செய்தார்.
திருக்கோயில் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.