/* */

இளம் பெண்னை பீர் குடிக்க வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் - 4 பேர் கைது

இளம் பெணணை பீர் குடிக்க வைத்து 5 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இது தொடர்பாக போலீசார் 4 பேரை கைது செய்தனர். ஒருவரை தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

இளம் பெண்னை பீர் குடிக்க வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் - 4 பேர் கைது
X

காஞ்சிபுரத்தில் இளம் பெண்ணை பீர் குடிக்க வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த ஐந்து பேரில் போலீசார் நான்கு பேரை கைது செய்தனர்.

பெரிய காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த பெண் தனியார் கடையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு காஞ்சிபுரம் அடுத்த சிறுவள்ளூர் மேட்டு காலணி பகுதியை சேர்ந்த ஜெபநேசன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காஞ்சிபுரம் அருகேயுள்ள மேல்கதிர்பூர் கிராமத்திலுள்ள நண்பரின் தோட்டத்திற்கு கடந்த 1ம் தேதி அழைத்து சென்றுள்ளார்.

மதுபோதையில் இருந்தால் உல்லாசமாக இருக்கலாம் என அப்பெண்ணை கட்டாயப்படுத்தி பீர் அருந்து வைத்துள்ளார். அப்போது தனது நண்பர்களான குணசீலன் , குணசேகரன்,அஜித்குமார் மற்றும் ஓருவர் என ஐந்து பேர் அப்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்நிலையில் இன்று பாலுசெட்டி காவல் நிலையத்தில் இப்பெண் அளித்த புகார் மீது காவல் கண்காணிப்பாளர் எம் சுதாகர் அதிரடி நடவடிக்கை எடுத்தார். இது தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்தார். அந்த தனிப்படை போலீசார் நான்கு பேரை கைது செய்தனர். இதில் பெயர் தெரியாத நபரை தேடி வருகின்றனர்.

சினிமா பட பாணியில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் காஞ்சிபுரத்தில் அரங்கேறியுள்ளது. போதிய அறிமுகம் இல்லாத நிலையில் ஆண் ஒருவருடன் செல்வது ஆபத்தானது என பெண்களுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Updated On: 9 Sep 2021 3:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  2. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  3. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  4. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  5. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  6. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  7. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  8. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது
  9. பல்லடம்
    குடிநீா் கேட்டு இச்சிப்பட்டி ஊராட்சி அலுவலகம் முற்றுகை
  10. வீடியோ
    Congress-ஐ இறங்கி அடித்த Modi !#modi #bjp #congress #rahulgandhi...