Begin typing your search above and press return to search.
மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய வேண்டும், கலெக்டர் வேண்டுகோள்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்தில் உறுப்பினர்களாக சேர கலெக்டர் ஆர்த்தி அழைப்பு விடுத்துள்ளார்.
HIGHLIGHTS
மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் புதியதாக அமைக்கப்படவுள்ளதால் மாற்றத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்கென செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள். மாற்றுத்திறனாளிகள் நல உறுப்பினர்களாக சேர்வதற்கு விருப்ப மனு அளிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்
மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2018-ன்படி உள்ள 21 வகையான மாற்றுத்திறன் கொண்ட மாற்றுத்திறனாளிகள் நல உறுப்பினராக சேர்வதற்கு உரிய விருப்ப மனுக்களை புகைப்படம் மற்றும் சுயவிவரம் ஆகியவற்றுடன் வரும் 09.07.2021-க்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், செங்கல்பட்டு என்ற முகவரியில் அளிக்கலாம் என அவர் தெரிவித்தார்