/* */

பூந்தமல்லி அருகே ஆம்னி பேருந்து எரிந்து சாம்பல்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் டிராவல்ஸ் ஈ பேருந்தின் பின்பக்கம் மற்றொரு பேருந்து மோதியதால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பூந்தமல்லி அருகே ஆம்னி பேருந்து எரிந்து சாம்பல்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்
X
கொழுந்துவிட்டு எரியும் பேருந்து.

சென்னை கோயம்பேட்டிலிருந்து பெங்களூர் நோக்கி தனியார் டிராவல்ஸ் பேருந்து சென்று கொண்டிருந்தது. சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பூந்தமல்லி அடுத்த பாப்பான்சத்திரம் அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆரணி நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஆம்னி பேருந்தின் பின்பகுதியில் மோதியது .

மோதிய வேகத்தில் ஆம்னி ஈ பஸ்சின் பின் பகுதி நொறுங்கிய நிலையில், தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை கண்டதும் பஸ்ஸில் பயணம் செய்த பயணிகள் அலறி அடித்தபடி வெளியேறினர். மேலும் பஸ்சை இயக்கிய டிரைவரும், பொதுமக்களும் சேர்ந்து எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தீயானது கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்ததால் அந்த பகுதி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சாலையில் சென்று கொண்டு இருந்த தண்ணீர் லாரியில் இருந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் தீ மள, மளவென எரிந்ததால் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் இருங்காட்டுக்கோட்டை தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரோடு ரசாயனம் கலந்த பவுடரை கலந்து எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.

அதற்குள் பஸ் முழுவதும் தீயில் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார் சாலையில் எரிந்த நிலையில் எலும்பு கூடாக கிடந்த ஆம்னி பேருந்தை அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

காலை நேரம் என்பதால் வேலைக்கு செல்பவர்கள் கல்லூரிகளுக்கு செல்பவரும் அதிகளவில் இந்த சாலையை பயன்படுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஆம்னி ஈ பேருந்தில் பின்பகுதியில் வாகனத்தின் அனைத்து உபகரணங்களும் இருந்ததால் தனியார் பேருந்து மோதிய வேகத்தில் ஆம்னி ஈ பேருந்து தீப்பிடித்து எரிந்தது தெரியவந்தது.

இந்த தீபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. இந்த பகுதியில் அதிக அளவில் தனியார் கல்லூரிகள் இருப்பதால் கல்லூரிக்கு நேரமானதை அறிந்த கல்லூரி பேருந்து டிரைவர்கள் சாலையின் எதிர் திசையில் சென்றதால் இரண்டு பகுதிகளிலும் வாகனங்கள் செல்ல முடியாமல் அப்படியே போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டதால் இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசலும் பரபரப்பும் ஏற்பட்டது.

Updated On: 22 Sep 2023 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு