Begin typing your search above and press return to search.
காஞ்சிபுரத்தில் வேட்பாளர்களுக்கு போதிய வசதிகள் செய்து தரப்படவில்லை
காஞ்சிபுரம் மாநகராட்சியில் வேட்புமனு தாக்கல் செய்யும் வரும் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவினை சரிபார்க்க கூட அறைகள் இல்லை என குற்றச்சாட்டு
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனு கடந்த வெள்ளிக்கிழமை துவங்கியது. துவக்க நாளில் வேட்புமனுக்கள் தாக்கல் குறைந்து காணப்பட்டாலும் , மெல்ல மெல்ல சூடு பிடிக்கத் துவங்கி நேற்றுவரை 180 நபர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
வேட்புமனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளர்கள் மனுவை அமர்ந்து சரிபாக்க ஒரு அறை கூட ஒதுக்கவில்லை. மேலும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வரிசையில் நின்றுகொண்டே தாக்கல் செய்யும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.
மேலும் தேர்தல் அலுவலரின் அறைக்கு செல்லும் வழிகாட்டி பலகைகளும் சரிவர அமைக்கப்படாததால் கடைசி நாளில் வேட்பாளர்கள் அங்கும் இங்கும் அலைந்து திரியும் அவல நிலையும் ஏற்பட்டது.