/* */

ஜல்ஜீவன் திட்ட செயல்பாட்டிற்காக காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு தேசிய விருது

மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

ஜல்ஜீவன் திட்ட செயல்பாட்டிற்காக காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு தேசிய விருது
X

ஜல்ஜீவன் திட்டத்தில் சிறந்த மாவட்டமாக தேர்வு செய்யப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மத்திய அரசின் விருது வழங்கப்பட்டது.

அனைத்து கிராமங்களிலும் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து தருவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத் , உத்திரமேரூர், குன்றத்தூர் ஆகிய ஐந்து ஒன்றியங்களில் உள்ள 274 ஊராட்சிகளிலும் ஜல்ஜீவன் மிஷன் திட்டம் மிகச் சிறப்பாக அமல்படுத்தப்பட்டது.

இதன் மூலம் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வசதி உறுதி செய்யப்பட்டது ஆய்வில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மத்திய அரசு ஜல்ஜீவன் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்கான தேசிய விருது வழங்கப்பட்டு உள்ளது.

இதனைத் தொடர்ந்து டெல்லியில் நடைபெற்ற விழாவில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி , காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி ஆகியோர் இந்த விருதினை பெற்றனர்.

Updated On: 2 Oct 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  2. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  3. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  4. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    நாங்கள் காத்துகொண்டு இருக்கிறோம் ! #annamalai #annamalaibjp ...
  7. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  8. பொன்னேரி
    சோழவரம் அருகே லாரி மீது தனியார் கல்லூரி பேருந்து மோதி விபத்து
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  10. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி: இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2 லட்சம்