ஜல்ஜீவன் திட்ட செயல்பாட்டிற்காக காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு தேசிய விருது
மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்டது.
HIGHLIGHTS
அனைத்து கிராமங்களிலும் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து தருவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத் , உத்திரமேரூர், குன்றத்தூர் ஆகிய ஐந்து ஒன்றியங்களில் உள்ள 274 ஊராட்சிகளிலும் ஜல்ஜீவன் மிஷன் திட்டம் மிகச் சிறப்பாக அமல்படுத்தப்பட்டது.
இதன் மூலம் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வசதி உறுதி செய்யப்பட்டது ஆய்வில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மத்திய அரசு ஜல்ஜீவன் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்கான தேசிய விருது வழங்கப்பட்டு உள்ளது.
இதனைத் தொடர்ந்து டெல்லியில் நடைபெற்ற விழாவில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி , காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி ஆகியோர் இந்த விருதினை பெற்றனர்.