''அம்மாவின் ஆன்மா மன்னிக்காது'' : அதிமுக வேட்பாளர்களை கலாய்க்கும் நெட்டிசன்கள்
காஞ்சிபுரத்தில் மேயர் போட்டி திமுக வேட்பாளருக்கு ஆதரவாக அதிமுகவினர் வாக்களிக்க சென்றது அதிமுக அனுதாபிகளிடையே அதிர்ச்சி.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாநகராட்சி மன்ற மேயர் மற்றும் துணை மேயர் மறைமுக தேர்தல் இன்று காலை 9.30 மணிக்கு துவங்கியது.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் 50 இடங்களில் 32 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. திமுக சார்பில் மேயர் வேட்பாளராக மகாலட்சுமி யுவராஜ் திமுக தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டார். ஏற்கனவே மேயர் வேட்பாளருக்கு டாக்டர் சூர்யாசோபன்குமாரும் விருப்பம் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் திடீரென திமுக அறிவித்த வேட்பாளருக்கு போட்டியாக டாக்டர் சோம் சூர்யாசோபன்குமார் அதிமுக, பாமக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் ஆதரவுடன் போட்டியிடுகிறார்.
இதைக்கண்ட அதிமுக அபிமானிகள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவின் சின்னத்தில் நின்று வெற்றி பெற்று தற்போது திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பணம் பெற்றுக் கொண்டு செயல்படுவது அவமானமிக்க செயல் எனவும், இதை ஜெயலலிதாவை ஆன்மா மன்னிக்காது எனவும் இதற்கான தண்டனை கிடைக்கும் எனவும் இணையதளங்களில் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.