/* */

பைக்கின் சீட்டை உடைத்து 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை

ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தவர் தனது இருசக்கர வாகனத்தில் பணத்தை வைத்திருந்ததை மர்ம நபர்கள் அறிந்துள்ளனர்.

HIGHLIGHTS

பைக்கின் சீட்டை உடைத்து 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை
X

இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூபாய் 2 லட்சம் பணத்தை கொள்ளையடித்த பின் அதிர்ச்சியுடன் நின்றிருந்த பிள்ளை பாக்கம் பகுதியை அருள்பிரகாஷ்.

ஸ்ரீபெரும்புதூர் நகரில் வங்கியில் பணம் எடுத்துக் கொண்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் வண்டியை நிறுத்திவிட்டு பேசிக் கொண்டிருந்த நபரின் பைக்கின் சீட்டை உடைத்து 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பிள்ளைப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அருள்பிரகாஷ். இந்தப் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு டீ மற்றும் உணவுகளை சப்ளை செய்து வருகிறார்.

இந்த நிலையில் ஸ்ரீபெரும்புதூர் தேரடி வீதியில் உள்ள கனரா வங்கிக்கு சென்று ரூ 2,60,000 ஆயிரம் ரூபாய் பணத்தை கணக்கில் இருந்து எடுத்துக் கொன்று ஸ்கூட்டி வண்டியின் சீட்டுக்கு கீழே வைத்து பூட்டிவிட்டு தன்னுடைய நண்பர்களை சந்திக்க வட்டாட்சியர் அலுவலகம் சென்று வண்டி நிறுத்திவிட்டு நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.

பின்னர் வண்டியை எடுக்க வந்த போது பின் சீட்டின் லாக்கர் உடைந்து கீழே கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து சீட்டை தூக்கி பார்க்கும் போது அதில் வைத்து இருந்த 2 லட்சத்தி 60 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை போனதை கண்டு ஶ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்தார்.

அந்தப் புகாரை தொடர்ந்து விரைந்து வந்த தாலுகா காவல்துறையினர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சுற்றி கொண்டிருந்த சிலரை பிடித்து விசாரணை செய்ததில் பணத்தைக் கொள்ளையடித்த நபர் யாரும் கண்ணில் தென்படவில்லை.

பின்னர் அந்தப் பகுதிகளில் இருக்கும் கண்காணிப்பு கேமராக்களை ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

Updated On: 11 Nov 2023 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  2. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  3. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  4. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  6. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  7. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  8. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்
  9. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  10. சோழவந்தான்
    சமயநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா