காஞ்சிபுரம் : டெங்கு காய்சலுக்கு சிறுமி பலி ?
காஞ்சிபுரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த பள்ளி மாணவி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் உப்பேரிகுளம் பகுதியை சேர்ந்தவர் அப்பள கூலித் தொழிலாளி விஜயகுமார். இவருடைய இளைய மகள் ஸ்ருதி அருகில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வருகிறார்.
இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி லேசான காய்ச்சல் ஏற்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த நிலையில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் குறைபாடு ஏற்பட்டு உள்ளதாக கூறி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கடந்த 20ஆம் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு டெங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடந்த 10 தினங்களாக சிறுமிக்கு காய்ச்சல் எனக்கூறி சிகிச்சை அளித்து வந்த அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பெற்றோர்களிடம் முறையான தகவல்களை அளிக்கவில்லை என பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இப்பள்ளி மாணவி மரணம் குறித்து மருத்துவ துறை சார்பில் எந்தவித விளக்கமும் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.