Begin typing your search above and press return to search.
காஞ்சிபுரம் : கொடி கம்பம் திருட்டு நாம் தமிழர் காவல்துறையில் புகார்
காஞ்சிபுரம் அருகே நாம் தமிழர் கட்சி கொடி கம்பத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளதாக பாலுசெட்டி காவல் நிலையத்தில் நிர்வாகிகள் புகார் அளித்தனர்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்டம் , காஞ்சிபுரம் ஒன்றிய நாம் தமிழர் கட்சி சார்பாக கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கிளைக் கழகம் சார்பில் கொடியேற்று விழா நடைபெற்று கொடியேற்றப்பட்டது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு நடப்பட்டிருந்த கொடிக்கம்பத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். காலை அப்பகுதி வழியாக நிர்வாகிகள் சென்றபோது கொடிக்கம்பத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்துள்ளது.
இது குறித்து நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.கொடிக்கம்பம் திருட்டு தொடர்பாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.