/* */

காஞ்சிபுரத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்.. ஆட்சியர், எம்.பி. பங்கேற்பு...

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, செல்வம் எம்.பி. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்.. ஆட்சியர், எம்.பி. பங்கேற்பு...
X

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி பங்கேற்றார்.

காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம், திம்ம சமுத்திரம் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட சித்தேரிமேடு பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் இன்று காலை சமத்துவ பொங்கல் விழா துவங்கியது. விழாவில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளை கட்டைக்கூத்து கலைஞர்கள் மேளதாளம் முழங்க கிராம ஊராட்சி மன்ற தலைவர் தேவேந்திரன் தலைமையில் கிராமத்தினர் வரவேற்றனர்.


அதனை தொடர்ந்து ஆட்சியர் ஆர்த்தி மகளிர் சுய உதவிக் குழுக்கள் கலந்து கொண்ட கோல போட்டிகளை ஆய்வு செய்தார். இதில் மகளிருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோலங்களும் சமத்துவ பொங்கல் கொண்டாட்ட கோலங்களும் இடம்பெற்று இருந்தது. 15-க்கும் மேற்பட்ட மகளிர்கள் புது பானையை அலங்கரித்து பச்சரிசி வெல்லம் உள்ளிட்ட பொருட்கள் தயாராக வைத்திருந்த நிலையில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமார் பொங்கல் நிகழ்வினை தொடக்கி வைத்தார்.

பொங்கல் பொங்கி வரும் நிலையில் ஆட்சியர் ஆர்த்தி பெண்களுடன் இணைந்து அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து கூறி பொங்கலோ பொங்கல் என அனைவரும் ஒருங்கிணைந்து முழக்கமிட்டு குலவையிட்டு பொங்கல் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடினர்.


அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் நடன நிகழ்ச்சியும், பாரம்பரிய கலை விழா விளையாட்டுக்காக சிலம்பம், கட்டைக்கூத்து கலைஞர்களின் கலை நிகழ்ச்சி என ஆடல் பாடலுடன் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் ஆகியோர் பரிசுகளை வழங்கி பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்ளை தெரிவித்தனர்.

மேலும், உரியடி திருவிழாவில் எம்பி செல்வம் கலந்து கொண்டு உரியடிக்க அனைவரும் ஆரவாரம் தெரிவித்து மகிழ்ந்தனர். நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்யா சுகுமார், திமுக ஒன்றிய செயலாளர் குமார் , வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பவானி மற்றும் வரதராஜன், திம்மசமுத்திரம் கிராம ஊராட்சி துணைத் தலைவர் சுந்தரம், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் செயலர் சரவணன், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 13 Jan 2023 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?