/* */

காஞ்சிபுரம் : திறப்பு விழா கண்டும் பயன்பாட்டிற்கு வராத மாவட்ட கருவூலம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில், ரூபாய் 4 கோடியே 96 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றும் கருவூலம் பயன்பாட்டிற்கு வரவில்லை.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் : திறப்பு விழா கண்டும் பயன்பாட்டிற்கு வராத மாவட்ட கருவூலம்
X

பயன்பாட்டிற்கு வராத காஞ்சிபுரம் மாவட்ட கருவூலம்.

காஞ்சிபுரம் மாவட்ட கருவூல அழகு கடந்த 1962-ஆம் ஆண்டு முதல் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த மாவட்ட அலகின் கீழ் நான்கு சார் கருவூலங்கள் இயங்கி வருகிறது. இதில் அரசு ஊழியர்கள் 13 ஆயிரம் பேரும், ஓய்வூதியர்கள் 9500 நபர்களும், பணம் பெரும் அலுவலர்களாக 300க்கும் மேற்பட்டோர் பயன் பெற்று வருகின்றனர்.

இதற்கான அலுவலக கட்டிடம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் தரைத் தளத்தில் இயங்கி வந்தது. அனைவருக்கும் சற்று இட நெருக்கடியை தந்ததால் புதிய கட்டிடம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் கட்ட தீர்மானிக்கப்பட்டது.

அவ்வகையில் ரூபாய் 4 கோடியே 96 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மாவட்ட கருவூல அலுவலக கட்டிடத்தை, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமை செயலகத்தில் இருந்து கடந்த அக்டோபர் 25ம் தேதி காணொலி மூலம் திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழக ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் காஞ்சிபுரம் கருவூல அலுவலகத்தில் குத்து விளக்கேற்றி இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்வில், க.சுந்தர் எம்.எல்.ஏ, மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை ஆ.மனோகரன் கலந்து கொண்டனர்.

திறப்பு விழா கண்டு பல மாதங்களாகியும் தற்போது வரை கருவூல அலுவலகம் இட மாற்றம் செய்யப்படாமல் பூட்டப்பட்டே உள்ளது. மேலும் பழைய அலுவலகம் இடம் மாறினால் பல்வேறு சிறிய அலுவலகங்கள் வாடகையில் தனியார் கட்டிடங்களில் இயங்கி வருவது இங்கு வர வாய்ப்பாக அமையும்.

மேலும் புதிய அலுவலகக் கட்டிடத்தில் அதிக அளவு இடம் இருப்பதால் மேலும் சிறிய அலுவலகங்கள் அமைக்கும் அளவுக்கு வாய்ப்பு தர இயலும் என்பதால் உடனடியாக இக்கட்டிடம் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Updated On: 9 Jan 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  2. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  3. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  4. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  5. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  6. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  7. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  8. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  9. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  10. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...