காஞ்சிபுரம் மாநகராட்சி : 50 மாமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் அண்ணா அரங்கத்தில் பதவியேற்றுக் கொண்டனர்.
HIGHLIGHTS
தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற மாநகராட்சி, நகராட்சி , பேருராட்சி மன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு விழா தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்றது. அதன்படி காஞ்சிபுரம் மாநகராட்சியில் 50 வார்டுகளுக்கு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற 50 மாமன்ற உறுப்பினர்கள் பதவியேற்கும் விழா, காஞ்சிபுரம் மாநகராட்சி அறிஞர் அண்ணா அரங்கத்தில் நடைபெற்றது.
விழாவில் காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையரும் தேர்தல் அதிகாரியுமான நாரயணன், மாமன்ற உறுப்பினர்களுக்கு வார்டு வாரியாக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். திமுக மற்றும் அதன் கூட்டனி கட்சியினர் 34 பேரும், அதிமுக கூட்டணியை சேர்ந்த 9 பேரும், பா.ம.கவை சேர்ந்த 2 பேரும், பா.ஜ.கவை சேர்ந்த ஒருவரும், சுயேட்சையாக 4 பேரும் என வெற்றி பெற்ற 50 மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வந்து பதவியேற்றனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகள் உள்ள நிலையில், 36 வது வார்டில் அதிமுக வேட்பாளர் உயிரிழந்ததின் காரணமாக அந்த ஒரு வார்டில் மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மாமன்ற உறுப்பினர்கள் பதவியேற்ப்பு விழாவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் க.சுந்தர்,சி.வி.எம்.பி எழிலரசன் மற்றும் அனைத்து கட்சி முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.