/* */

காஞ்சிபுரம்: ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 200 வாகனங்கள் பறிமுதல்!

காஞ்சிபுரம் வாகன சோதனையில் ஊரடங்கு விதிகளை மீறி சுற்றித்திரிந்த 200 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம்: ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 200 வாகனங்கள் பறிமுதல்!
X

தீவிர வாகன சோதனையில் போலீசார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பரவலைத் தடுக்கும் வகையில் தளர்வுகளுடன் போடப்பட்ட இருவார ஊரடங்கு உத்தரவு முடிவடைந்தது. இதையடுத்து ஒரு வாரத்துக்கு தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வீடு தேடி கிடைக்க அந்தந்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்யும் என அறிவித்தார்.

தளர்வுகள் அற்ற ஊரடங்கில் மருத்துவம் பால், ஆம்புலன்ஸ் உள்ளிட்டவைகளுக்கு விதி விலக்கு அளிக்கப்பட்டு தேவையற்ற சுற்றித்திரியும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்படும் என எச்சரிக்கபட்டது.

காஞ்சிபுரத்தில் இன்று காலை முதல் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சாலையில் வருவதைக் கண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டார்.

அப்பொழுது விதிகளை மீறி வந்த இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை சுமார் 200 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு காவல் துறை கட்டுப்பாட்டில் எடுத்து செல்லப்பட்டு வாகனங்களில் உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனை நடத்தி ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Updated On: 24 May 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்