Begin typing your search above and press return to search.
காஞ்சிபுரம்: கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 1202 பேர் குணமடைந்தனர்!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை முடிந்து இன்று ஓரே நாளில் 1202 பேர் வீடு திரும்பி உள்ளனர்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாகவே கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கூடி வந்த நிலையில் தளர்வுகளற்ற ஊரடங்கால் மீண்டும் கட்டுக்குள் வந்துள்ளது.
கடந்த சில வாரங்களாக சிகிச்சையில் இருந்த 1202 பேர் இன்று ஓரே நாளில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இது ஒரு மாதத்திற்கு பிறகு இன்று அதிகளவில் வீடு திரும்பியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
மேலும் பாதிப்பு என்ற வகையில் இன்று 527 பேர் மட்டுமே தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற அனுமதிக்கபட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரடங்கால் பாதிப்பு குறைந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.